Wednesday, May 06, 2015
திருப்பூர் அருகே, செட்டிபாளையம் பகுதியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் திமுக பிரமுகர், அவரது மனைவி, மகன் கொலை செய்யப்பட்டனர்.
திருப்பூர், செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (64). இவர் 3-ஆவது வார்டு திமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி சாரதாம்பாள் (52). மகள் ஷோபனா (28). மகன் நவீந்திரன் (26). இவர், 1-ஆவது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.
இந்நிலையில், சிவசுப்பிரமணியத்தின் வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் இரும்புக் கம்பியால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, சிவசுப்பிரமணியம், சாரதாம்பாள் ஆகியோர் உயிரிழந்து கிடந்துள்ளனர். மகன் நவீந்திரன் கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நவீந்திரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் நவீந்திரன் உயிரிழந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டார். மேலும் பலத்த காயமடைந்த ஷோபனா திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
நகைகள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது, இது கொள்ளை முயற்சிக்காக நடைபெற்ற கொலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், இவர்களது கார் ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார். எனவே, தனிப்படை அமைத்து இவ்வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர். இதுகுறித்து, அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment