Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
காங்கயத்தில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
 காங்கயம், தாராபுரம் சாலையில் உள்ள அமராவதி நகரில் வசிப்பவர் அப்புக்குட்டி (40). இவர், குடும்பத்துடன் வியாழக்கிழமை வெளியூர் சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஊர் திரும்பினார். அப்போது, வீட்டுப் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்து ரூ. 57,000 ரொக்கம், 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
  அதே பகுதியில், கொங்கு நகரில் வசிப்பவர் யுவராஜ். இவர், டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.  இவர், குடும்பத்துடன் கடந்த 29-ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தார்.  இந்நிலையில் மர்மநபர்கள் அவர் வீட்டுக்குள் புகுந்து மோதிரம், தோடு உள்பட 4 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். 
     இவ்விரு சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

0 comments: