Sunday, May 03, 2015
உடுமலை அருகே புதிய பேருந்து வழித்தட தொடக்க விழாவும், புதிய பாலம் திறப்பு விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம், வடுகபாளையம் கிராமங்கள் வழியாக பூளவாடிக்கு நகரப் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கும் விழா வடுகபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் கொடியசைத்து, புதிய வழித் தடத்தில் பேருந்தை இயக்கி வைத்தார்.
பாலம் திறப்பு: உடுமலை-பல்லடம் வழித் தடத்தில் உள்ள உப்பாற்றின் குறுக்கே ரூ. 37.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் திறப்பு விழா நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் இதைத் திறந்து வைத்தார். மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), ஊராட்சித் தலைவர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment