Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
உடுமலை அருகே புதிய பேருந்து வழித்தட தொடக்க விழாவும்,  புதிய பாலம் திறப்பு விழாவும் சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம், வடுகபாளையம் கிராமங்கள் வழியாக பூளவாடிக்கு  நகரப் பேருந்து இயக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கும் விழா வடுகபாளையம் கிராமத்தில் நடைபெற்றது.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் கொடியசைத்து, புதிய வழித் தடத்தில் பேருந்தை இயக்கி வைத்தார்.
பாலம் திறப்பு: உடுமலை-பல்லடம் வழித் தடத்தில் உள்ள உப்பாற்றின் குறுக்கே  ரூ. 37.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இதன் திறப்பு விழா நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் இதைத் திறந்து வைத்தார். மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் (பொள்ளாச்சி), ஊராட்சித் தலைவர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: