Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
பெட்ரோல், டீசல் விலை உயர்வை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என கொங்குநாடு முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல் விலை சிறிது குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஏற்றப்பட்டுள்ளது.
 மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கு கண்டனத்துக்குரியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, விலை உயர்வை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: