Saturday, May 02, 2015
இந்துவும் நானே; இஸ்லாமியனும் நானே என்று பாலிவுட் நடிகரும், மான் வேட்டை வழக்கில் சிக்கியவருமான சல்மான் கான் கூறியுள்ளார்.
1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்த சல்மான் கான், இரவு நேரத்தில் மான்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு தொடர்ந்தது.

அதில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் மேல் முறையீடு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அந்த வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மான் வேட்டை வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜோத்பூர் நகர நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரான அவர், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என மறுத்தார்.
பின்னர் விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்தைவிட்டு சல்மான் கான் வெளியே வந்தார். அப்போது, பத்திரிக்கையாளர், அவரது தந்தையின் மதம் குறித்தும் அவரது தொழில் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ’இந்து, முஸ்லீம் இரண்டுமேதான்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், அவரது தந்தை, எழுத்தாளரான சலீம் கான் ஒரு முஸ்லீம் என்றும், அவரது தாய் சுஷீலா சாரக் ஒரு இந்து என்றும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment