Saturday, May 02, 2015

பஞ்சாப் மாநிலத்தில், ஓடும் பேருந்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை எதிர்த்துப் போராடிய 14 வயது சிறுமி பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவி 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது மகன் மற்றும் 14 வயது மகளுடன் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தார்.
அந்தப் பேருந்து, டோல் பிளாசா என்ற இடம் தாண்டி மோகா நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் இருந்த 2 நடத்துநர்களில் ஒருவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
அப்போது, அந்தப் பேருந்தில் மிகக் குறைவான பயணிகளே இருந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். ஆனால் இதை ஓட்டுநர் கண்டுகொள்ள வில்லை.
நீண்ட நேரம் இந்த தொல்லை தொடர்ந்து கொண்டு இருந்ததால், பொறுமை இழந்த அந்த பெண் தனது மகளுடன் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே குதித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தாயும் மகளும் வெளியே தள்ளப்பட்டதாகவுவும் கூறப்படுகிறது.
தாய்-மகள் இருவரையும் பேருந்தில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தாய்-மகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே மகள் உயிரிழந்தார். தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடைபெற்ற பேருந்து பஞ்சாப் முதலமைச்சர் சுக்பிர் பாதலுக்கு சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும் மற்றொரு நிறுவனத்திற்கு அது லீசுக்கு கொடுக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment