Saturday, May 02, 2015
திருமண உறவுக்குள் பாலியல் வல்லுறவுகள் நடக்கும் சம்பவங்கள் அதிகமாக இருப்பதாக ஐ.நா மன்ற புள்ளிவிவரங்கள் காட்டுவதாகவும், எனவே இந்திய அரசு இந்த தாம்பத்ய உறவுக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவை குற்றமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய உள்துறை துணை அமைச்சர் ஹரிபாய் சௌத்ரி, இந்தியாவில் நிலவும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார காரணங்களால், இதை ஒரு குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க முடியாது என்று பதிலளித்திருக்கிறார்.

ஐநா மன்றம் சமீபத்தில் இந்தியாவில் திருமண உறவுக்குள் வரும் பெண்களில் சுமார் 75 சதவீதத்தினர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறியிருப்பதாகக் கூறிய கனிமொழி, இந்தக் குற்றத்தை இந்திய தண்டனை சட்டப்பிரிவுக்குள் ஒரு குற்றமாக்க தேவையான சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து குடும்பச் சட்டம் குறித்த வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர், கீதா ராமசேஷன் , பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், இந்த குற்றம் மேலை நாடுகளிலேயே கடந்த சுமார் 20 அல்லது 30 வருடங்களாகவே ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் , இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் வல்லுறவு என்ற குற்றப்பிரிவில், இந்த தாம்பத்ய உறவுக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவுக்கு விதிவிலக்குத் தரப்பட்டிருக்கிறது என்றார்.
ஆனாலும், இந்தியாவில் , விவாகரத்து வழக்குகளில் பாலியல் துஷ்பிரயோகம், வீட்டில் நடக்கும் வன்முறை (domestic violence) போன்றவை குற்றப்பிரிவுகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் நடந்த நிர்பயா வல்லுறவு வழக்கை அடுத்து பாலியல் வல்லுறவு என்பதற்கான விளக்கங்கள் விஸ்தரிக்கப்பட்டாலும், திருமண பந்தத்துக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவு ஒரு குற்றமாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கான கலாசார காரணங்கள் இருப்பதாக அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இதை ஒரு குற்றமாக அங்கீகரிக்க பெண்ணிய அமைப்புகள் மேலும் இயக்கங்களை நடத்தினால்தான் அது நடக்கும் என்றார்.
அது போல விவாகரத்து வழக்குகளில்,தாம்பத்ய உறவை மீண்டும் பெறும் உரிமை (restitution of conjugal rights) ஒரு உரிமையாக கருதப்பட்டு வருகிறது. இது ஒரு உரிமையாகக் கருதப்படக்கூடாது என்றார் கீதா ராமசேஷன்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment