Saturday, May 02, 2015

திமுக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது,
தமிழக சட்டசபைக்கு குறிப்பிட்ட 2016 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தாலும், அதற்கு முன்னதாகவே தேர்தல் நடந்தாலும் அதை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. தேர்தலை கண்டு திமுக எப்போதும் அஞ்சியது கிடையாது.
ஆந்திராவில் 20 அப்பாவி கூலி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணை முறையாக நடக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழக மற்றும் ஆந்திர அரசுகள் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் அப்பாவி தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைக்கும்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது. கர்நாடக அரசு அணை கட்டுவது என உறுதியாக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக முதலமைச்சருக்கு இருக்கும் உறுதி, அதை தடுப்பதில் தமிழக முதல்வருக்கும் வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
0 comments:
Post a Comment