Tuesday, June 09, 2015

On Tuesday, June 09, 2015 by Unknown in ,    
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் ரெயில்வே கேட்டில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் வாலிபர் ஒருவரது உடல் இரு துண்டாக கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் இன்று காலை பார்த்தனர். இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் துண்டாகி கிடந்த வாலிபர், இன்று அதிகாலை அந்த வழியே மதுரை சென்ற ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தற்கொலை செய்த வாலிபரின் பெயர் தவமணி சங்கர் (வயது 26) என்பதும் கேட்டரிங் பட்டதாரியான அவர் பெற்றோருடன் கப்பலூரில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.
நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், இன்று காலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 comments: