Tuesday, June 09, 2015

On Tuesday, June 09, 2015 by Unknown in ,    
மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திருவாதவூரில் உள்ள பி.கே.எஸ். கிரானைட் குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருவாதவூர் பகுதியில் மேலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்த குவாரியில் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் கிரானைட் கற்களை உடைத்து லாரி மற்றும் டிராக்டரில் கடத்த முயன்றது தெரியவந்தது.
உடனே அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து, அந்த கும்பல் வைத்திருந்த வாகனங்களை மேலூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் கைப்பற்றினார். விசாரணையில், அவர்கள் லாரி டிரைவர் பனைக்குளத்தை சேர்ந்த பெருமாள், டிராக்டர் டிரைவர் டி.உலகுபிச்சான்பட்டியை சேர்ந்த ராஜு (வயது 26), லாரி உரிமையாளர்கள் டி.பழையூரை சேர்ந்த வீரணன்(32), மாயாண்டி (42), ஒத்தக் கடையை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

0 comments: