Tuesday, June 09, 2015
மதுரையில் அதிகநேரம் பணியில் ஈடுபட கிளை மேலாளர்
வற்புறுத்துவதாக புகார் தெரிவித்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்
அரசுப் பேருந்து ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளிக்க முயன்றதால்
பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2013
ஆம் ஆண்டு முதல் அரசுப் பேருந்து ரிசர்வ் பணி ஓட்டுநராக பணியில் உள்ளார்.
மாநகர் அரசு பேருந்துகளில் ஓட்டுநராக உள்ள செந்தில்குமார்,
ஞாயிற்றுக்கிழமை பகலில் பணிக்கு வந்து இரவு 9 மணிக்கு பணியை
முடித்துள்ளார்.
பணியை அவர் முடித்த நிலையில், வெளியூர் பேருந்துக்கு
ஓட்டுநராகச் சென்றுவர மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டெப்போ கிளை மேலாளர்
கூறியுள்ளார். வெளியூருக்குச் செல்ல முடியாத நிலையிலிருப்பதாக கூறிய
செந்தில்குமார், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மீண்டும் மாநகர்
பேருந்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நகரப்
பேருந்துகள் நிற்கும் பகுதியில் கிளை மேலாளருக்கும், ஓட்டுநர்
செந்தில்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய
நிலையில், செந்தில்குமார் தான் வைத்திருந்த கேனிலிருந்த பெட்ரோலை தலையில்
ஊற்றிக்கொண்டு கிளை மேலாளரைக் கட்டிப்பிடித்து தற்கொலை செய்ய
முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த மற்ற பேருந்து ஓட்டுநர்கள்
செந்தில்குமாரைத் தடுத்து, சமரசம் செய்தனர். பின் செந்தில்குமார் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டெப்போ கிளை மேலாளரைக்
கண்டித்து திங்கள்கிழமை காலையில் அரசுப் போக்குவரத்துக் கழக புதூர்
பணிமனை முன்பு பேருந்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் (சிஐடியூ)
போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மதுரைக் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக
துணைமேலாளர் (கூட்டாண்மை) துரைராஜ் அங்கு வந்து, ஓட்டுநர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக சிஐடியூ தலைவர் ஜி.ராஜேந்திரன் கூறுகையில்,
ஓட்டுநர்களுக்கு அதிக நேரம் பணிகளை ஒதுக்குவதால் மன உளைச்சளுக்கு
ஆளாகின்றனர். இச்செயலை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும், என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment