Tuesday, June 09, 2015
மதுரையில் அதிகநேரம் பணியில் ஈடுபட கிளை மேலாளர்
வற்புறுத்துவதாக புகார் தெரிவித்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்
அரசுப் பேருந்து ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இரவு தீக்குளிக்க முயன்றதால்
பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2013
ஆம் ஆண்டு முதல் அரசுப் பேருந்து ரிசர்வ் பணி ஓட்டுநராக பணியில் உள்ளார்.
மாநகர் அரசு பேருந்துகளில் ஓட்டுநராக உள்ள செந்தில்குமார்,
ஞாயிற்றுக்கிழமை பகலில் பணிக்கு வந்து இரவு 9 மணிக்கு பணியை
முடித்துள்ளார்.
பணியை அவர் முடித்த நிலையில், வெளியூர் பேருந்துக்கு
ஓட்டுநராகச் சென்றுவர மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டெப்போ கிளை மேலாளர்
கூறியுள்ளார். வெளியூருக்குச் செல்ல முடியாத நிலையிலிருப்பதாக கூறிய
செந்தில்குமார், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மீண்டும் மாநகர்
பேருந்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நகரப்
பேருந்துகள் நிற்கும் பகுதியில் கிளை மேலாளருக்கும், ஓட்டுநர்
செந்தில்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய
நிலையில், செந்தில்குமார் தான் வைத்திருந்த கேனிலிருந்த பெட்ரோலை தலையில்
ஊற்றிக்கொண்டு கிளை மேலாளரைக் கட்டிப்பிடித்து தற்கொலை செய்ய
முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த மற்ற பேருந்து ஓட்டுநர்கள்
செந்தில்குமாரைத் தடுத்து, சமரசம் செய்தனர். பின் செந்தில்குமார் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலைய டெப்போ கிளை மேலாளரைக்
கண்டித்து திங்கள்கிழமை காலையில் அரசுப் போக்குவரத்துக் கழக புதூர்
பணிமனை முன்பு பேருந்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் (சிஐடியூ)
போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மதுரைக் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக
துணைமேலாளர் (கூட்டாண்மை) துரைராஜ் அங்கு வந்து, ஓட்டுநர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக சிஐடியூ தலைவர் ஜி.ராஜேந்திரன் கூறுகையில்,
ஓட்டுநர்களுக்கு அதிக நேரம் பணிகளை ஒதுக்குவதால் மன உளைச்சளுக்கு
ஆளாகின்றனர். இச்செயலை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும், என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இராணு...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்று...
-
திருச்சி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல்வந்து சேர்ந்தது. அதிகால...
0 comments:
Post a Comment