Friday, September 25, 2015
விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் கோ-ஆப்டெக்ஸ்
சிறப்பு தள்ளுபடி மூலம் ரூ.71 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.
விருதுநகர் தெப்பம் பஜார் பகுதியில் கோ-ஆப்டெக்ஸ்
விற்பனை மைய வளாகத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையின் தொடக்க விழா
புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை
வகித்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு கைத்தறி
நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1925ல் தொடங்கி, தொடர்நது 80 ஆண்டுகளாக
நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவையை அளித்து
வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும்
திருவிழாக் காலங்களில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனையும் செய்து வருகிறது.
நிகழாண்டில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கோஆப்டெக்ஸில்
அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச்சேலைகள், படுக்கை விரிப்புகள்,
தலையணை உறைகள் மற்றும் ஜீன்ஸ் டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சுடிதார்,
வெண்பட்டுச்சேலைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில்
விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவை
ரகங்கள், கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்குடி சேலைகள்
விற்பனைக்குள்ளன. ஆண்களுக்கான லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள்
ஆகியவை பல்வேறு வண்ணங்களில் உள்ளன. கோஆப்டெக்ஸின் வலைத்தளமான
www.cooptex.com என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக்
கொள்ளலாம்.
மதுரை மண்டல கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 20 விற்பனை
நிலையங்களின் மூலம் கடந்தாண்டு ரூ.24.84 கோடிக்கு விற்பனை
செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நிகழாண்டில் ரூ.30 கோடிக்கு விற்பனை
செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், விருதுநகர் விற்பனை
நிலையத்தின் மூலம் கடந்தாண்டு 58.61 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் நிகழாண்டில் ரூ.71 லட்சத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
விழாவில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, கோ-ஆப்டெக்ஸ்
நிர்வாக குழு உறுப்பினர் மஞ்சுளா, மதுரை மண்டல மேலாளர் ரஞ்சனி, முதுநிலை
மேலாளர் கோ.அன்பழகன், மேலாளர் பழனிச்சாமி, துணை மண்டல மேலாளர்(நிர்வாகம்)
ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...



0 comments:
Post a Comment