Friday, September 25, 2015
விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் கோ-ஆப்டெக்ஸ்
சிறப்பு தள்ளுபடி மூலம் ரூ.71 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.
விருதுநகர் தெப்பம் பஜார் பகுதியில் கோ-ஆப்டெக்ஸ்
விற்பனை மைய வளாகத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையின் தொடக்க விழா
புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை
வகித்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு கைத்தறி
நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1925ல் தொடங்கி, தொடர்நது 80 ஆண்டுகளாக
நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவையை அளித்து
வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும்
திருவிழாக் காலங்களில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனையும் செய்து வருகிறது.
நிகழாண்டில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கோஆப்டெக்ஸில்
அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச்சேலைகள், படுக்கை விரிப்புகள்,
தலையணை உறைகள் மற்றும் ஜீன்ஸ் டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சுடிதார்,
வெண்பட்டுச்சேலைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில்
விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவை
ரகங்கள், கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்குடி சேலைகள்
விற்பனைக்குள்ளன. ஆண்களுக்கான லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள்
ஆகியவை பல்வேறு வண்ணங்களில் உள்ளன. கோஆப்டெக்ஸின் வலைத்தளமான
www.cooptex.com என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக்
கொள்ளலாம்.
மதுரை மண்டல கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 20 விற்பனை
நிலையங்களின் மூலம் கடந்தாண்டு ரூ.24.84 கோடிக்கு விற்பனை
செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நிகழாண்டில் ரூ.30 கோடிக்கு விற்பனை
செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், விருதுநகர் விற்பனை
நிலையத்தின் மூலம் கடந்தாண்டு 58.61 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் நிகழாண்டில் ரூ.71 லட்சத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
விழாவில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, கோ-ஆப்டெக்ஸ்
நிர்வாக குழு உறுப்பினர் மஞ்சுளா, மதுரை மண்டல மேலாளர் ரஞ்சனி, முதுநிலை
மேலாளர் கோ.அன்பழகன், மேலாளர் பழனிச்சாமி, துணை மண்டல மேலாளர்(நிர்வாகம்)
ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...



0 comments:
Post a Comment