Friday, September 25, 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்கில் மேலதிகாரிகளின் நிர்பந்தத்தின் காரணமாகவே தற்கொலை நிகழ்ந்திருப்பதற்கான காரணம் என வெளிப்படையாக தெரிகிறது.
அவர் விசாரித்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி யுவராஜ் இது வரை கைது செய்யப்பட வில்லை. உள்ளூரில் இருக்கும் குற்றவாளியை கைது செய்யவிடாமல் தடுப்பது எந்த சக்தி என்பது தெரியவில்லை.
குற்றவாளி பலம் வாய்ந்த அரசியல் பிண்ணனியில் இருக்கலாம் என்பதும் கைது செய்யப்படாததற்கான காரணமாக இருக்கலாம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்வது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. சி.பி.ஐ விசாரணை வேண்டும்.
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. முத்துகுமார சாமியை தொடர்ந்து தற்போது பல லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்து வரும் சகாயத்திற்கும் காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அங்கு நரபலி விசாரணையில் எலும்பு கூடுகள் கிடைத்திருப்பது அச்சத்தை வர வழைத்துள்ளது. அரசு உடன்பட்டு உண்மைகளை வெளி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டமும் மக்களை முழு அளவில் சென்றடையாத நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும். இதனால் சிவகாசியில் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீன பட்டாசுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment