Friday, September 25, 2015
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்கில் மேலதிகாரிகளின் நிர்பந்தத்தின் காரணமாகவே தற்கொலை நிகழ்ந்திருப்பதற்கான காரணம் என வெளிப்படையாக தெரிகிறது.
அவர் விசாரித்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி யுவராஜ் இது வரை கைது செய்யப்பட வில்லை. உள்ளூரில் இருக்கும் குற்றவாளியை கைது செய்யவிடாமல் தடுப்பது எந்த சக்தி என்பது தெரியவில்லை.
குற்றவாளி பலம் வாய்ந்த அரசியல் பிண்ணனியில் இருக்கலாம் என்பதும் கைது செய்யப்படாததற்கான காரணமாக இருக்கலாம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்வது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. சி.பி.ஐ விசாரணை வேண்டும்.
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. முத்துகுமார சாமியை தொடர்ந்து தற்போது பல லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்து வரும் சகாயத்திற்கும் காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அங்கு நரபலி விசாரணையில் எலும்பு கூடுகள் கிடைத்திருப்பது அச்சத்தை வர வழைத்துள்ளது. அரசு உடன்பட்டு உண்மைகளை வெளி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டமும் மக்களை முழு அளவில் சென்றடையாத நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும். இதனால் சிவகாசியில் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீன பட்டாசுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment