Friday, September 25, 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளராக முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்தி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்கில் மேலதிகாரிகளின் நிர்பந்தத்தின் காரணமாகவே தற்கொலை நிகழ்ந்திருப்பதற்கான காரணம் என வெளிப்படையாக தெரிகிறது.
அவர் விசாரித்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி யுவராஜ் இது வரை கைது செய்யப்பட வில்லை. உள்ளூரில் இருக்கும் குற்றவாளியை கைது செய்யவிடாமல் தடுப்பது எந்த சக்தி என்பது தெரியவில்லை.
குற்றவாளி பலம் வாய்ந்த அரசியல் பிண்ணனியில் இருக்கலாம் என்பதும் கைது செய்யப்படாததற்கான காரணமாக இருக்கலாம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்வது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல. சி.பி.ஐ விசாரணை வேண்டும்.
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. முத்துகுமார சாமியை தொடர்ந்து தற்போது பல லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்து வரும் சகாயத்திற்கும் காவல் துறையினர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அங்கு நரபலி விசாரணையில் எலும்பு கூடுகள் கிடைத்திருப்பது அச்சத்தை வர வழைத்துள்ளது. அரசு உடன்பட்டு உண்மைகளை வெளி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டமும் மக்களை முழு அளவில் சென்றடையாத நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.
பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும். இதனால் சிவகாசியில் தொழில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீன பட்டாசுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment