Friday, September 25, 2015
சிவகாசி அண்ணாமலையார் காலனி சீனிவாசன் மகன்
சுரேஷ்குமார் (33). காமாக் நகர் பாண்டியன் மகன் அருண்குமார். இவர்கள்
இருவரும் பங்குதாரர்களாக சேர்ந்து மேட்டமலையில் பட்டாசு ஆலை நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ்குமார் பட்டாசு ஆலையில் இருந்து
வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து சுரேஷ்குமார் விசாரித்தபோது, அருண்குமார்,
அவரது மனைவி ஸ்ரீதேவி, மாணிக்க விநாயகர் காலனி அருணாசலம் மகன் ஹரிகணேஷ்,
விருதுநகர் கே.இ.எஸ்.குடோன் தெரு துரைராஜ் மகன் ஸ்ரீதரன் ஆகிய நான்கு
பேரும் சேர்ந்து, போலியாக பத்திரம் தயாரித்து, சுரேஷ்குமார் போல
கையெழுத்திட்டு அந்த பத்திரத்தை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. அந்த
பத்திரத்தில் சுரேஷ்குமார் தான் பட்டாசு ஆலை பங்குதாரர் பொறுப்பிலிருந்து
விலகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து சுரேஷ்குமார் உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
தன்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் மேற்குறிப்பிட்ட 4 பேர்
மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment