Friday, September 25, 2015
சிவகாசி அண்ணாமலையார் காலனி சீனிவாசன் மகன்
சுரேஷ்குமார் (33). காமாக் நகர் பாண்டியன் மகன் அருண்குமார். இவர்கள்
இருவரும் பங்குதாரர்களாக சேர்ந்து மேட்டமலையில் பட்டாசு ஆலை நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ்குமார் பட்டாசு ஆலையில் இருந்து
வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து சுரேஷ்குமார் விசாரித்தபோது, அருண்குமார்,
அவரது மனைவி ஸ்ரீதேவி, மாணிக்க விநாயகர் காலனி அருணாசலம் மகன் ஹரிகணேஷ்,
விருதுநகர் கே.இ.எஸ்.குடோன் தெரு துரைராஜ் மகன் ஸ்ரீதரன் ஆகிய நான்கு
பேரும் சேர்ந்து, போலியாக பத்திரம் தயாரித்து, சுரேஷ்குமார் போல
கையெழுத்திட்டு அந்த பத்திரத்தை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. அந்த
பத்திரத்தில் சுரேஷ்குமார் தான் பட்டாசு ஆலை பங்குதாரர் பொறுப்பிலிருந்து
விலகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து சுரேஷ்குமார் உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
தன்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் மேற்குறிப்பிட்ட 4 பேர்
மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment