Monday, November 23, 2015
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் தூத்துக்குடி, மாவட்டத்தை சார்ந்த 2698 பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கத்தினையும், 10,61கோடி நிதியுதவியினையும் வழங்கினார்.
பின்னர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் பேசும் போது தெரிவித்தாவது:
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. பெண்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், கிராமப்புற மகளிரின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம், மகளிரின் திருமணத்திற்கு 4 கிராம் தங்கத்துடன் 25ஃ50 ஆயிரம் உதவித்தொகை, கர்ப்பினி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் மகப்பேறு உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணனி, விலையில்லா மிதிவண்டி, முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத் திட்டம், என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 17907 பயனாளிகளுக்கு 71.62 கிலோ திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் ரூ.64.27 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. அரசின் நல திட்ட உதவிகளை பெறுகின்ற மக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.விஜயகுமார், சமூகநலத்துறை அலுவலர் (பொ) திருமதி.இரா.ஆனந்த வள்ளி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்; திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment