Monday, November 30, 2015

On Monday, November 30, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அனல்மின்நிலைய ஊழியர் வீட்டில் 72 பவுன் நகைகளை மர்ம நபரகள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி, காமராஜர் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு நெல்லையாளன் (68). ஓய்வு பெற்ற அனல்மின்நிலைய ஊழியர். மேலும், பாஜகவின் மூத்தோர் பிரிவு தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி பாப்பு சுந்தரி. சமீபத்தில் பெய்த கனமழையால் காமராஜர் நகர் குதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து சங்கரசுப்பு அவரது மனைவியுடன், சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இன்று காலை சங்கரசுப்பு வீடுதிரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 72 பவுன் நகைகள் மற்றும் ரூ. 6 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

0 comments: