Tuesday, December 15, 2015

On Tuesday, December 15, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி செல்வநாயகபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் மதன்குமார் (21). தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கருத்தப்பாலம் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாராம்.

அப்போது அங்கு வந்த ரத்தினபுரத்தை சேர்ந்த ஸ்ரீராம்குமார், வடபத்திரகாளியம்மன் கோவில் தெருவைசேர்ந்த சுப்பிரமணியன், முகமது சாதலிபுரத்தை சேர்ந்த சிவா, ரத்தினபுரத்தை சேர்ந்த மாப்ஜான் உள்பட 6 பேர் சேர்ந்து மதன்குமாரை கத்தியால் குத்தி செல்போனை பறிக்க முயன்றார்களாம். இதில் காயம் அடைந்த மதன்குமார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராம்குமார், சுப்பிரமணியன், சிவா, மாப்ஜான் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.  

0 comments: