Sunday, September 30, 2018

On Sunday, September 30, 2018 by Tamilnewstv   
திருச்சி_30.09.18

எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.



திருச்சி எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளையின் பொது செயலாளர் skd. பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கருவாட்டு பேட்டை மற்றும் வீரமாநகரம் பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக்கின் அபாயம் குறித்து

விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறி துணிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நமசிவாயம், மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெய்க்கி, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: