Sunday, September 30, 2018
திருச்சி 29.09.18
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செயலாளர் ஜான் குமார் பேட்டி
ஜனநாயக ஜனதாதளம் (எல்.ஜே.டி.) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் ராஜகோபால் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில பொது செயலாளர்கள் வையாபுரி, ஹேமநாதன், இப்ராம்பால், மாவட்ட தலைவர்கள் அறிவழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலை திருச்சி அண்ணா சிலை அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்திய அரசு போர் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இதில் மோடி ஊழல் நடைபெறவில்லை என்று நிரூபிக்க பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவிடம் புலனாய்வு செய்ய ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு 100 முறை உயர்ந்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் வரியை பாதியாக குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். 1838–ல் கட்டப்பட்ட முக்கொம்பு அணை உடைந்து விட்டது. இதில் புதிய அணை கட்ட சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில் நுட்பம் கொண்டதாக டெண்டர் விட வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடர்வோம். மேலும் மணல் கொள்ளையை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை என தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை என கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் நலன் கருதி டாக்டர் சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும். விரைவில் மழைக்காலம் வர இருப்பதால் ஏரி குளங்களை தூர் வார வேண்டும்.
திருச்சி மாநகராட்சியில் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செயலாளர் ஜான் குமார் பேட்டி
ஜனநாயக ஜனதாதளம் (எல்.ஜே.டி.) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் ராஜகோபால் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில பொது செயலாளர்கள் வையாபுரி, ஹேமநாதன், இப்ராம்பால், மாவட்ட தலைவர்கள் அறிவழகன், உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலை திருச்சி அண்ணா சிலை அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்திய அரசு போர் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இதில் மோடி ஊழல் நடைபெறவில்லை என்று நிரூபிக்க பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவிடம் புலனாய்வு செய்ய ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு 100 முறை உயர்ந்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் வரியை பாதியாக குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். 1838–ல் கட்டப்பட்ட முக்கொம்பு அணை உடைந்து விட்டது. இதில் புதிய அணை கட்ட சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில் நுட்பம் கொண்டதாக டெண்டர் விட வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடர்வோம். மேலும் மணல் கொள்ளையை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை என தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை என கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் நலன் கருதி டாக்டர் சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும். விரைவில் மழைக்காலம் வர இருப்பதால் ஏரி குளங்களை தூர் வார வேண்டும்.
திருச்சி மாநகராட்சியில் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment