Sunday, September 30, 2018

On Sunday, September 30, 2018 by Tamilnewstv in ,    
*திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு*


   
திருச்சி சமயபுரம் அருகே சுங்கச்சாவடி யில் சாலையோரத்தில் நின்றிருந்த இரும்பு ஏற்றி வந்த லாரி மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த   கார் லாரி மீது மோதிய விபத்தில் காரில் பயணித்த 13 பேரில் , 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.



திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் ம ற்றும் 3 ஆண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

       
        சென்னை மேடவாக்கம் விஜய், மஞ்சுநாதன் கந்த சாமி, பாலமுருகன் சுப்ரமணி, ஜெயலட்சுமி, பாக்கி லட்சுமி, கவிதா உட்பட 13பேர் பேட்ட வாய்த் தலை அருகே வீடு வாங்கியதை ஸ்கார்ப்பியோ காரில் பார்க்க வந்தனர். 22 டன் எடையுள்ள இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் நெல்லுரில் இருந்து வந்த லாரி, திருச்சி சமயபுரம் அருகே நெம்பர் 1 டோல்கேட் பகுதியில் இரும்பு லோடுடன் நின்று கொண்டிருந்தது.
மேடவாக்கத்தில் இருந்து வந்த கார், அதிகாலை 4.15 மணிக்கு மோதி விபத்துக்குள்ளானது.
சுமார் மூன்றரை மணி நேரம் மீட்பு பணி நடந்தது.
விபத்தில் 3 ஆண், 3 பெண்கள்,  2 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த டோல்கேட் பகுதியில் இரவு நேரத்தில் விளக்குகள் எரிவதில்லை. மேலும், அதே பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்துவதால் தான் லோடு வாகனங்கள் இந்த இடத்தில் நிறுத்தப்படுகின்றன. அதனால் தான் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. என்பது இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு .
கார் ஒட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் வந்ததால் தான் விபத்து நிகழ்ந்த தாகவும் கூறப்படுகிறது.
 பரிதாபமாக உயிரிழந்தனர்.

0 comments: