Thursday, September 04, 2014
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமுகமான கன்னடப் படம் ‘பவர்’. அங்கு பல சாதனைகளைப் புரிந்து வருகிறதாம் த்ரிஷாவின் படம். 80 வருட கன்னட சினிமா வரலாற்றில் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்த படம் என்ற சாதனையை ‘பவர்’ திரைப்படம் புரிந்திருக்கிறதாம். 275 திரையரங்குகளுக்கும் மேல் வெளியான ‘பவர்’ படம் மூன்று நாட்களுக்குள்ளாகவே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் வெளியான முதல் நாளன்றுதான் அதிகமான வசூலைத் தரும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் முதலிரண்டு நாள் வசூலை விட மூன்றாம் நாள் வசூல்தான் அதிகமாக இருந்ததாம். இதுவும் ஒரு சாதனை என்கிறார்கள்.
இந்த வருடத்தில் இதற்கு முன் சுதீப், வரலட்சுமி நடித்து வெளிவந்த ‘மானக்யா’ படம்தான் இதுவரை வந்த கன்னடப் படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த படமாக இருந்ததாம். அந்த சாதனையை ‘பவர்’ படம் முறியடித்து விடும் என்கிறார்கள். ஒரு நாளைக்கு 1060 காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் திரையிடப்படுகிறதாம். இந்த படத்தின் வெற்றி மூலம் த்ரிஷாவிற்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம். அவருக்கென்றும் ரசிகர் கூட்டம் உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இனி, த்ரிஷா கன்னடப் படங்களிலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வரும் என்கிறார்கள். ஆனால், தமிழ், தெலுங்கை விட அங்கு சம்பளம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். அதற்கு சம்மதித்து த்ரிஷா தொடர்ந்து கன்னடப் படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. பணமா, படமா..எதை த்ரிஷா தேர்வு செய்வார் என்று பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment