Thursday, September 04, 2014
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமுகமான கன்னடப் படம் ‘பவர்’. அங்கு பல சாதனைகளைப் புரிந்து வருகிறதாம் த்ரிஷாவின் படம். 80 வருட கன்னட சினிமா வரலாற்றில் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்த படம் என்ற சாதனையை ‘பவர்’ திரைப்படம் புரிந்திருக்கிறதாம். 275 திரையரங்குகளுக்கும் மேல் வெளியான ‘பவர்’ படம் மூன்று நாட்களுக்குள்ளாகவே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் வெளியான முதல் நாளன்றுதான் அதிகமான வசூலைத் தரும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் முதலிரண்டு நாள் வசூலை விட மூன்றாம் நாள் வசூல்தான் அதிகமாக இருந்ததாம். இதுவும் ஒரு சாதனை என்கிறார்கள்.
இந்த வருடத்தில் இதற்கு முன் சுதீப், வரலட்சுமி நடித்து வெளிவந்த ‘மானக்யா’ படம்தான் இதுவரை வந்த கன்னடப் படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த படமாக இருந்ததாம். அந்த சாதனையை ‘பவர்’ படம் முறியடித்து விடும் என்கிறார்கள். ஒரு நாளைக்கு 1060 காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் திரையிடப்படுகிறதாம். இந்த படத்தின் வெற்றி மூலம் த்ரிஷாவிற்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம். அவருக்கென்றும் ரசிகர் கூட்டம் உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இனி, த்ரிஷா கன்னடப் படங்களிலும் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வரும் என்கிறார்கள். ஆனால், தமிழ், தெலுங்கை விட அங்கு சம்பளம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். அதற்கு சம்மதித்து த்ரிஷா தொடர்ந்து கன்னடப் படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. பணமா, படமா..எதை த்ரிஷா தேர்வு செய்வார் என்று பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
.jpg)
0 comments:
Post a Comment