Thursday, December 10, 2015

On Thursday, December 10, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தூத்துக்குடி பீச் ரோட்டில் நேற்று போலீஸ் எஸ்.ஐ ஜீவமணி தர்மாஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு கார்களில் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர். இதில் இரண்டு அரிவாள், மூன்று வாள்கள் வைத்திருந்தனர். துப்பாக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது. ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அசோகன் (46),சக்தி வினாயகர் நகர், ஸ்டேட்பாங்க் காலனி தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது இவர் மதுரை திடீர் நகரில் உள்ள பாஸ்கரதாஸ் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள சைக்கிள் ஸ்டான்ட், கழிப்பறை உள்ளிட்டவைகளை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த தொழில் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர். 

இவர் மீது புதுக்கோட்டை, தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம்,தட்டப்பாறை போலீஸ் ஸ்டேஷன்களில்,கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் நி<லுவையில் உள்ளன. இவருடன் வருகை தந்த தூத்துக்குடி டி.எம்.பி., காலனியை சேர்ந்த மனோகரன் (45), அய்யப்பன் (45), மதுரை, ஆனையூர், முத்துநகரை சேர்ந்த ளேந்திரன் (40), தூத்துக்குடி ஜெயிலானி தெருவை சேர்ந்த பழனிவேல் (46), மில்லர்புரத்தை சேர்ந்த ராகவானந்தம் (47), ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: