Thursday, December 10, 2015
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி பீச் ரோட்டில் நேற்று போலீஸ் எஸ்.ஐ ஜீவமணி தர்மாஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நான்கு கார்களில் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர். இதில் இரண்டு அரிவாள், மூன்று வாள்கள் வைத்திருந்தனர். துப்பாக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது. ஆனால் போலீசார் இதனை மறுத்துள்ளனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அசோகன் (46),சக்தி வினாயகர் நகர், ஸ்டேட்பாங்க் காலனி தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது இவர் மதுரை திடீர் நகரில் உள்ள பாஸ்கரதாஸ் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள சைக்கிள் ஸ்டான்ட், கழிப்பறை உள்ளிட்டவைகளை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த தொழில் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்.
இவர் மீது புதுக்கோட்டை, தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம்,தட்டப்பாறை போலீஸ் ஸ்டேஷன்களில்,கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் நி<லுவையில் உள்ளன. இவருடன் வருகை தந்த தூத்துக்குடி டி.எம்.பி., காலனியை சேர்ந்த மனோகரன் (45), அய்யப்பன் (45), மதுரை, ஆனையூர், முத்துநகரை சேர்ந்த ளேந்திரன் (40), தூத்துக்குடி ஜெயிலானி தெருவை சேர்ந்த பழனிவேல் (46), மில்லர்புரத்தை சேர்ந்த ராகவானந்தம் (47), ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
0 comments:
Post a Comment