Thursday, October 23, 2014

On Thursday, October 23, 2014 by Unknown in ,    

வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக கோவிலை சுற்றி தென்னை ஓலையால் கூரை வேயப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அம்மன் கோவில் அருகில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று பாய்ந்து சென்று கோவிலை சுற்றி கட்டப்பட்டிருந்த ஓலை கூரை மீது விழுந்தது. இதில் ஓலை தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அந்த பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைத்தனர். இதில் கோவிலை சுற்றி கட்டியிருந்த ஓலை கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது.

0 comments: