Saturday, December 05, 2015

On Saturday, December 05, 2015 by Unknown in , ,    



தூத்துக்குடி மாவட்டம் வீரநாயக்கன்தட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் 220 நபர்களுக்கு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் இன்று (5.12.2015) உணவு வழங்கினார். மேலும் அவர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 12வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால், வயதானவர்களுக்கு ரொட்டி போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்காலிக  முகாம்களில் தங்கி உள்ளவர்கள் வீடு திரும்பும் வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்படும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.பி.மோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: