Saturday, December 05, 2015
தூத்துக்குடி மாவட்டம் வீரநாயக்கன்தட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் 220 நபர்களுக்கு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் இன்று (5.12.2015) உணவு வழங்கினார். மேலும் அவர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 12வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால், வயதானவர்களுக்கு ரொட்டி போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளவர்கள் வீடு திரும்பும் வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்படும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.பி.மோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இ...
-
கோவை, செப். 24– கோவையை அடுத்த திருமலையாம் பாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லட்சுமணன் உள்ளார்...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
0 comments:
Post a Comment