Thursday, January 21, 2016
திருச்செந்தூர் பகுதியில் 2 குழந்தைகளிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கீழவெயிலு கந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் (37). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக தனது கைக்குழந்தையுடன் சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சிறுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடியுள்ளான். குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கந்தன் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் மதுரை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (32). இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார். தனது கைக்குழந்தையுடன் ஜெயபால் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டு தப்பி விட்டான். இதுகுறித்து ஜெயபால் திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்கள், நகைகள், குழந்தைகள் காணாமல் போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் முறையாக கண்காணிப்பில் ஈடுபடாமல் மெத்தனம் காட்டி வருவதால் பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட மிரண்டு போய் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment