Saturday, January 09, 2016
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி செமப்புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 45) கொத்தனார். இவருடைய மனைவி பரமேசுவரி (32). இவர்களுக்கு அஜித் (10), கலைச்செல்வம் (9), முனிய சாமி (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். வீட்டில் செலவுக்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். கடந்த 8.3.14 அன்று இரவு சுப்பையா மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிடும் போது, செலவுக்கு பணம் கொடுக்காமல் குடித்துவிட்டு வருவதை பரமேசுவரி கண்டித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பையா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை பரமேஸ்வரி மீது ஊற்றி தீவைத்து கொளுத்தி விட்டார். இதில் உடல் கருகிய நிலையில் பரமேஸ்வரி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அப்போது, தண்டனை விதிக்கப்பட்ட சுப்பையா நான் ஜெயிலுக்கு போனால் எனது 3 குழந்தைகளும் அனாதையாகி விடும் என்று கூறி நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து 3 சிறுவர்களையும், குழந்தைகள் நலக்குழு மூலம் படிக்க வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இராணு...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி...
0 comments:
Post a Comment