Saturday, January 09, 2016
தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி செமப்புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 45) கொத்தனார். இவருடைய மனைவி பரமேசுவரி (32). இவர்களுக்கு அஜித் (10), கலைச்செல்வம் (9), முனிய சாமி (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
சுப்பையாவுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். வீட்டில் செலவுக்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். கடந்த 8.3.14 அன்று இரவு சுப்பையா மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிடும் போது, செலவுக்கு பணம் கொடுக்காமல் குடித்துவிட்டு வருவதை பரமேசுவரி கண்டித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுப்பையா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை பரமேஸ்வரி மீது ஊற்றி தீவைத்து கொளுத்தி விட்டார். இதில் உடல் கருகிய நிலையில் பரமேஸ்வரி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அப்போது, தண்டனை விதிக்கப்பட்ட சுப்பையா நான் ஜெயிலுக்கு போனால் எனது 3 குழந்தைகளும் அனாதையாகி விடும் என்று கூறி நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து 3 சிறுவர்களையும், குழந்தைகள் நலக்குழு மூலம் படிக்க வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment