Wednesday, February 17, 2016

On Wednesday, February 17, 2016 by Tamilnewstv in    


திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைகழக  துணைவேந்தர் முனைவர் முத்துகுமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

 தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம், வணிகவியல்,கணிதம், உயிரியல்,தாவரவியல், கணினி உள்ளிட்ட இளங்கலை பாடப்பிறிவில் 115 மாணவர்களும், 161 மாணவிகளும் நுண்ணுயிரியல், சமூகப்பநிதுரை, உயிர்தொழிற்நுட்பவியல் போன்ற முதுநிலை பாடப்பிரிவில் 49 மாணவர்களும், 80 மாணவிகளும் என மொத்தம் 405 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் இளங்கலை ஆங்கிலத்துறையில் சங்கீதா, நுண்ணுயிரியல் துறையில் நித்தியா,முதுநிலை உயிர்தொழிற்நுட்பவியல் துறையில் வசந்தி, வணிகவியல் துறையில் செல்வப்பிரியா உள்ளிட்டோர் பல்கலைகழக அளவில் முதல் மதிப்பெண் பெற்று  தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் 24 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

0 comments: