Tuesday, February 16, 2016
தூத்துக்குடியில் இன்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 190 பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். 
ஊதிய உயர்வு, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10–ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலளார் ராமமூர்த்தி தலைமையில், அங்கன் வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட 190 பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.  முன்னதாக குரூஸ் பர்னாந்து சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment