Friday, February 05, 2016
தூத்துக்குடியில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஜெயசூரியா. அவருடைய மகன் அசோக் பாபு (53). நிதி நிறுவன அதிபர். இவரிடம், மேலசண்முகபுரம் வண்ணார் 2-வது தெருவை சேர்ந்த பால கணேசன் (40) என்பவர் ஆடிட்டராக உள்ளார். அசோக் பாபு கடந்த 5 வருடமாக வருமான வரி செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2014-ல் வருமான வரி செலுத்துவதற்காக, பால கணேசனிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை அசோக்பாபு கொடுத்துள்ளார். ஆனால் பாலகணேசன் அந்த பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக் பாபு தூத்துக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ஆடிட்டர் பால கணேசன் மற்றும் அவருடைய மனைவி ரம்யா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment