Monday, February 22, 2016
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல ;தொடர்பான அரசியல் கட்சியினர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார், இ.ஆ.ப.அவர்கள் தலைமையில இன்று(22.02.2016); நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
வாக்காளர் பட்டியலினை செம்மை படுத்தும் விதமாக இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்திட 15.02.2016 முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டு வருகிறது.24.02.2016 அன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்து அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் கூட்டம் நடத்திட வேண்டும்.மேற்கண்ட கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கண்டறியப்பட்ட இறந்து போன வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர் பட்டியல் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்படும். மேற்படி பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து பட்டியலில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கையொப்பம் அளிக்க வேண்டும்.
இறுதியான நீக்கம் செய்யப்பட உள்ள வாக்காளர்களின் விவர பட்டியல் 25.02.2016 அன்று வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் மாவட்ட இணைய தளத்திலும் வெளியிடப்படும். அரசியல் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களை 24.02.2016 அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை சந்தித்து நீக்கம் செய்யப்படவுள்ளவர்களின் பட்டியலை பெற்று சரி பார்த்து கையொப்பமிட அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இதுவரை நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து அதன் விவரத்தை தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கோள்கிறேன். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...

0 comments:
Post a Comment