Wednesday, May 11, 2016

On Wednesday, May 11, 2016 by Unknown in ,    



அவிநாசி அருகே லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
சேலத்தில் இருந்து கோவைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அவிநாசி புறவழிச் சாலையில் வேன் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. அவிநாசி கந்தம்பாளையம் பிரிவு அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் ஆந்திரத்தில் இருந்து கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனின் ஓட்டுநர் சுகவனேஸ்வரன் (42), சுகுமார் (47), அனுஷா (35) உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். அவ்வழியே வந்தவர்கள் அவர்களை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்

0 comments: