Wednesday, May 11, 2016
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் திருட்டு போனது குறித்து வீட்டின் காவலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உள்பட்ட திரு.வி.க. நகரை சேர்ந்தவர் நர்மதாமால் (40). இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். நர்மதாமால் தனது குடும்பத்துடன் சில நாள்களுக்கு முன் சுற்றுலா சென்றார். வீட்டின் பாதுகாப்புக்காக பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் பப்பு என்பவரை காவலுக்கு வைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், சுற்றுலாவை முடித்து விட்டு நர்மதாமால் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2.5 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. பாதுகாப்புக்கு இருந்த பப்புவும் மாயமாகியிருந்தார்.
இதுகுறித்து நர்மதாமால் திருப்பூர் வடக்கு போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பப்பு மகாராஷ்டிரத்தின் புணேவைச் சேர்ந்தவர் என்பதும் அவரும், அவரது நண்பரும் சேர்ந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ «ì - 5 Á¼òÐìÌÇõ ¾¡æ측 §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment