Wednesday, May 11, 2016
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் திருட்டு போனது குறித்து வீட்டின் காவலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உள்பட்ட திரு.வி.க. நகரை சேர்ந்தவர் நர்மதாமால் (40). இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். நர்மதாமால் தனது குடும்பத்துடன் சில நாள்களுக்கு முன் சுற்றுலா சென்றார். வீட்டின் பாதுகாப்புக்காக பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் பப்பு என்பவரை காவலுக்கு வைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், சுற்றுலாவை முடித்து விட்டு நர்மதாமால் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2.5 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. பாதுகாப்புக்கு இருந்த பப்புவும் மாயமாகியிருந்தார்.
இதுகுறித்து நர்மதாமால் திருப்பூர் வடக்கு போலீஸில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் வீட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பப்பு மகாராஷ்டிரத்தின் புணேவைச் சேர்ந்தவர் என்பதும் அவரும், அவரது நண்பரும் சேர்ந்து இந்தத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment