Wednesday, May 11, 2016
திருப்பூர், : திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் நேற்று வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சேகரித்தார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்ளை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சாக்கடை, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளும் எங்களுக்கு முறையாக கிடைக்கவில்லை.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில், பொய் வாக்குறுதிகளை கூறி எங்களை ஏமாற்றி விட்டனர் என்றனர். அப்போது, அவர்களிடம் பேசிய, திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன், திமுக ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும், கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அனைத்து மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ள குடிநீர், தரமான தார் சாலை, சாக்கடை கால்வாய் வசதி, கழிப்பிட வசதி என அனைத்து வசதிகளும் நிறைவேற்றித்தரப்படும். மக்களின் துயர் விரைவில் துடைக்கப்படும்.
வெளி மாவட்ட பனியன் தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய ஏதுவாக ஆண், பெண்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். காலை, மாலை நேரங்களில் பெண்களுக்கு என்று தனியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். எப்போது வேண்டுமென்றாலும் என்னை அணுகி உங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.ஆகவே இத்தொகுதியில் என்னை நீங்கள் பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment