Wednesday, May 11, 2016
திருப்பூர், : திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் நேற்று வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சேகரித்தார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்ளை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சாக்கடை, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளும் எங்களுக்கு முறையாக கிடைக்கவில்லை.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில், பொய் வாக்குறுதிகளை கூறி எங்களை ஏமாற்றி விட்டனர் என்றனர். அப்போது, அவர்களிடம் பேசிய, திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன், திமுக ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து திட்டங்களும், கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அனைத்து மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ள குடிநீர், தரமான தார் சாலை, சாக்கடை கால்வாய் வசதி, கழிப்பிட வசதி என அனைத்து வசதிகளும் நிறைவேற்றித்தரப்படும். மக்களின் துயர் விரைவில் துடைக்கப்படும்.
வெளி மாவட்ட பனியன் தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய ஏதுவாக ஆண், பெண்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். காலை, மாலை நேரங்களில் பெண்களுக்கு என்று தனியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். எப்போது வேண்டுமென்றாலும் என்னை அணுகி உங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.ஆகவே இத்தொகுதியில் என்னை நீங்கள் பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...

0 comments:
Post a Comment