Thursday, May 12, 2016
கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் கே.சுப்பிரமணியனை ஆதரித்து கரூரில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்ட ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியது: இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் தோல்வியை வழங்க வேண்டும். வாக்கு சேகரிக்கச் செல்லும் அதிமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடிக்கின்றனர்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்கிறார் ஜெயலலிதா. ஏன் கடந்த 5 ஆண்டுகளில் இதை செய்யவில்லை? இனி அவர் முதல்வராக முடியாது. முதல்வராக இருக்கும்போதே 2 முறை சிறைக்குச் சென்ற அவர், மீண்டும் சிறை செல்வது உறுதி. யானையின் மீது காட்டும் பரிவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் காட்டாதவர் ஜெயலலிதா.
காவிரி, முல்லை பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்சினை என எதற்கும் தீர்வு காணாத அவர் மீண்டும் முதல்வரானால் தமிழகம் நரகமாகிவிடும். மதுவால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துவிட்டனர். மக்களை சந்திக்காத, மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரியாத ஜெயலலிதா ஆட்சியில், ஏழை மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக் கவில்லை. அமைச்சர்களை அவர் கொத்தடிமைபோல நடத்துகிறார். மின்வெட்டைப் போக்குவதற்காக கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கி, மின் கட்டணச் சுமையை மக்கள் மீது சுமத்திவிட்டனர். இந்த அவலங்களில் இருந்து மீள, திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment