Sunday, August 28, 2016
On Sunday, August 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
28.8.16 சபரிநாதன் 9443086297
திருச்சியில்
முதன் முறையாக தேசிய அளவிலான
அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை
மருத்துவக் கருத்தரங்க மாநாடு - நுஆஐஊழுN 2016
திருச்சி28 ஆக: தேசிய அளவிலான அவசர
சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை
குறித்த சிறப்பு மருத்துவக் கருத்தரங்க
மாநாடு நுஆஐஊழுN 2016 மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் முதன் முறையாக ஞாயி;ற்றுக்கிழமை 28 ஆகஸ்ட் 2016 அன்று நடைபெற்றது. இந்த
சிறப்பு மருத்துவக் கருத்தரங்க நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் திருச்சி
கி. ஆ. ப. விசுவநாதம்
மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி
மகாத்மா காந்தி நினைவு அரசு
மருத்துவமனையின் டீன் பேராசிரியர் டாக்டர்.
ளு. மேரி லில்லி அவர்கள\ மதுரை
மண்டல அப்போலோ மருத்துவமனைகளின் தலைமை
செயல் அதிகாரி டாக்டர். ரோகிணி
ஸ்ரீதர் அவர்கள் துவக்கி வைத்தனர்..
சிறப்பு
விருந்தினர் திருச்சி கி. ஆ. ப.
விசுவநாதம் மருத்துவக் கல்லூரி டீன்
பேராசிரியர் டாக்டர். ளு. மேரி லில்லி
அவர்கள் தனது சிறப்புரையில்“இன்றைய
காலகட்டத்தில் மருத்துவத்துறை வியக்கதகு
முன்னேற்றங்கள் அடைந்து வருகிறது. அதிலும்
குறிப்பாக உலகளவில் அவசர சிகிச்சை பிரிவில்
அடைந்துள்ள முன்னேற்றங்களையும்ää அதிநவீன மருத்துவக் கருவிகளின்
துணைகொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகளையும் குறித்து வியந்ததுடன் மட்டுமல்லாதுää திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை
அனைத்து விதமான அவசர சிகிச்சைகளையும்
கையாளக் கூடிய மருத்துவ வல்லுநர்கள்
குழு மற்றும் அதிநவீன அவசர
சிகிச்சை பிரிவையும் கொண்டிருப்பதை வெகுவாக பாராட்டினார். அது
மட்டுமல்லாதுää மருத்துவர்களுக்கு பயனளிக்கக் கூடிய இது போன்று
மருத்துவ கருத்தரங்குகளை நடத்துவது குறித்து முயற்சியை பாராட்டியதுடன் மட்டுமல்லாமல்ää மென்மேலும் இப்பணி தொடர வாழ்த்துக்
கூறினார்.
அவசர
சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர
சிகிச்சை பிரிவு என்பது விபத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது மாரடைப்பு பக்கவாதம் விஷமருந்துதல் பாம்புக்கடி வயிற்று வலி மற்றும்
இது போன்ற அனைத்து அவசர
சிகிச்சைகளையும் உள்ளடக்கியது. அனைத்து
சிகிச்சைகளையும் செய்வதற்கு மிகச் சிறந்த இடமாக
திருச்சி அப்போலோ மருத்துவமனை திகழ்வதால்
அதில் எல்லா வசதிகளையும் வாய்ப்புகளையும்
இதற்கான தலைசிறந்த நாட்டின் உயரிய நிபுணர்கள் இருப்பதாலும் இதைச்
செய்வதற்கு உண்டான பலதரப்பட்ட கருவிகள்
இருப்பது குறித்து மிகவும் பெருமிதம் கொள்வதாக
குறிப்பிட்;டார்;.
ஆவசர
சிகிச்சை பிரிவிற்கு மிகவும் முக்கியமானது அனைத்து
அதிநவீன கருவிகள் மற்றும் கைதேர்ந்த மருத்துவக்
குழுவினர் கொண்ட ஆம்புலன் வாகனங்கள். ஆம்புலன்ஸ்
வாகனங்களுக்கு புPளு சிஸ்டம்
வசதி குறித்து கூறும்போதுää தற்போது நமது நாட்டில்
போக்குவரத்து வசதிகள் அதிக அளவில்
பெருகி விட்டன. வாகனங்களின்
எண்ணிக்கை முன்பிருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு பெருகி விட்டது. அதே போல் விபத்தால்
பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விபத்தால்
உயிர்கள் பலியாவதற்குக் காரணம் அவர்களுக்கு உடனடி
சிகிச்சை கிடைக்காததே ஆகும். உடனடி
சிகிச்சை அளித்து விட்டால் பலியாகும்
பல உயிர்களை நாம் காப்பாற்றி விடலாம்.
ஆம்புலன்ஸ் வாகனங்களில் புPளு சேவை
பொருத்துவதன் மூலம் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
“பொன்னான நேரத்தில் (புழடனநn ர்ழரச)” உடனடி
சிகிச்சை அளித்து காப்பற்றுவதன் மூலம்
பல உயிர்களை நாம் காக்க இயலும்.
இந்த புPளு தொழில்நுட்ப
சேவை முதன்முறையாக திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில்
துவங்கப்பட்டுள்ளது என்று மதுரை மண்டல
அப்போலோ மருத்துவமனைகளின் தலைமை செயல் அதிகாரி
டாக்டர். ரோகிணி ஸ்ரீதர் கூறினார்.
இந்த
சிறப்பு கருத்தரங்க மாநாட்டில் அவசர
சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை
பிரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பாம்புக்கடி
மற்றும் விஷம் அருந்துதலுக்கு அளிக்கப்படும்
அதிநவீன சிகிச்சை முறைகள் நரம்பில் செலுத்தப்படும்
திரவ சிகிச்சையான முறையான மருத்துவ முறைகள்
விபத்து மற்றும் அவசர சிகிச்iசையின் போது செய்ய
வேண்டிய முறையான அதிநவீனசிகிச்சை முறைகள்
குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்த அதிநவீனசிகிச்சை முறைகளானது
கலந்துரையாடல்கள் மற்றும் சிறப்புரைகளாக நடைபெற்றது. இந்தகருத்தரங்கில்
200-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான அவசர
சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை நிபுணர்கள்ää
மயக்கவியல் நிபுணர்கள் மருத்துவ
முதுநிலை பட்டபடிப்பு மாணவர்கள் அவசர சிகிச்சை ரூ
தீவிர சிகிச்சை பிரிவில் ஆர்வமுள்ள பொது மருத்துவ நிபுணர்கள்
மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள்
இந்த மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...