Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்தார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். தங்கம் வென்று வராலாற்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. தங்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் மாரியப்பன் பெருமை சேர்த்துள்ளார் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மாரியப்பன் தங்கவேவேலுவுக்கு மத்திய அரசு ரூ. 75 லட்சம் பரிசுத்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது

0 comments: