Saturday, September 24, 2016

திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜினீயரிங் மாணவர் கொலை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சங்கர்(வயது 22). இவருடைய மனைவி கவுசல்யா(19). இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டனர். கடந்த மார்ச் மாதம் 13–ந் தேதி உடுமலையில் சங்கரையும், கவுசல்யாவையும் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது.இதில் சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் தாய்மாமா பாண்டித்துரை உள்பட 11 பேரை கைதுசெய்தனர். இதில் 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.28–ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
இந்த கொலை வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி(பொறுப்பு) எம்.கே.ஜமுனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்து சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு சுதா முன்னிலையில் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனால் மாஜிஸ்திரேட்டு சுதாவுக்கு இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மாஜிஸ்திரேட்டு நேற்று சாட்சியம் அளிக்க வரவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 28–ந்தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment