Friday, September 02, 2016

On Friday, September 02, 2016 by Tamilnewstv in
திருச்சி 2.9.16                  சபரிநாதன் 9443086297

தமிழகம் முழுவதும் இன்று 12 அம்ச கோரிக்கைகள் வழியுறுத்தி வேலை நிறுத்தம் கண்டன பேரணி மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
அதில் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வரை பேரணியாக வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது தொழிற்சங்க தலைவர்கள் கூறுகையில் இரு சக்கரமற்றும் சிறு வியாபாரிகள் மட்டும் அல்லாமல் இருசக்கர மெக்கானிக் பெயின்டர் டிங்கர் லேத் ஒர்க்ஸ் எலக்ரிசியன் வெல்டர் டயர் பஞ்சர் மற்றும் தொழிலார்கள் அனைவரும் தொழிலை இழந்து கார்ப்;பரேட் நிறுவன முதலாளிகளிடம் அடிமைகளாக தள்ளப்படுவதற்கு இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கும் மேலும் விலை வாசிகள் உயர்வு பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு மற்றும் தொழிற்சாலைகள் தனியர் மயம் ஆகுதல் போன்றவைகளை வழியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் கண்டனப்பேரணி மறியல் நடைபெறுவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியி;ல் விடுதலைசிறுத்தைகட்சி டியுசிசி டிஒயிஎப்ஐ ஐஎன்டியுசி எஐசிசிடியு தமிழகமருந்து விற்பனையாளர் சங்கம் எஸ்டிபிஐ எஐடியுசி எல்பிஎப் சிஐடியு ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.