Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

திருப்பூர், திருப்பூர் மாநகரில் அடிக்கடி நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க மாநகர பகுதியில் வாகன தணிக்கை செய்ய போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சைமாத்தூர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருப்பூர் மாநகர பகுதிகளில் போலீசார் அதிரடியாக வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 20 பேர், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 35 பேர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 191 பேர் என்று சாலை விதிகளை மீறியதாக பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 489 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.82 ஆயிரத்து 620 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

0 comments: