Saturday, September 24, 2016
கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனை செயல்படுத்த மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. கர்நாடக அரசின் இத்தகைய அணுகுமுறை குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
காவிர் நீரை திறக்க மறுத்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பிடிவாதமான நிலைப்பாடு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை என்பதை ஏற்க மறுத்துள்ளது.
காரைக்கால் பிராந்தியத்தில் சம்பா நெற்பயிர்களுக்கு காவிரி நீர் முக்கியமாக தேவை. தண்ணீர் கிடைக்காவிட்டால் விவசாயிகள் துயரமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பினை மீறுவது நீதித்துறைக்கும், சட்டமன்றத்துக்குமிடையே மோதலை மட்டுமே உருவாக்கும். மேலும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பினை அம்மாநிலஅரசு உறுதிசெய்ய வேண்டும்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment