Saturday, September 24, 2016
கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனை செயல்படுத்த மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. கர்நாடக அரசின் இத்தகைய அணுகுமுறை குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
காவிர் நீரை திறக்க மறுத்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பிடிவாதமான நிலைப்பாடு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை என்பதை ஏற்க மறுத்துள்ளது.
காரைக்கால் பிராந்தியத்தில் சம்பா நெற்பயிர்களுக்கு காவிரி நீர் முக்கியமாக தேவை. தண்ணீர் கிடைக்காவிட்டால் விவசாயிகள் துயரமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பினை மீறுவது நீதித்துறைக்கும், சட்டமன்றத்துக்குமிடையே மோதலை மட்டுமே உருவாக்கும். மேலும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பினை அம்மாநிலஅரசு உறுதிசெய்ய வேண்டும்
Total Pageviews
News
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
 
 
 
 
 
 
 
 
 
