Tuesday, September 06, 2016
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் மாநகர காவல் துறையால் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
1. அவினாசியிலிருந்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் பூண்டியிலிருந்து ரிங்ரோடு, பூலுவபட்டி, வழியாக புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
2. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் அனைத்து வெளியூர் (திருச்சி, கோவை, மதுரை) பேருந்துகள் அனைத்தும் பூலுவபட்டி சென்று ரிங்ரோடு வழியாக அந்தந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
3. காங்கேயம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் நல்லூர், வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
4. தாராபுரம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் கோவில்வழி, வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
5. பல்லடத்திலிருத்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் வீரபாண்டி பிரிவிருந்து பழவஞ்சிபாளையம் வழியாக கோவில்வழி, பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
6. மங்கலம் வழியாக திருப்பூர் வரும் பேருந்துகள் அனைத்தும் ஆண்டிபாளையம் பிரிவு, வித்யாலயம் வழியாக பல்லடம் சாலையை வந்தடைய வேண்டும்.
7. அனைத்து வெளியூர் பேருந்துகளும் 08.09.2016 அன்று பழைய பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை.
8. அனைத்து உள்ளூர் பேருந்துகளும் ஊர்வலபாதைக்கு ஏற்றாற்போல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வழித்தடம் மாறுதல் செய்யப்படும்.
என திருப்பூர் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment