Tuesday, September 06, 2016
திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் மாநகர காவல் துறையால் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
1. அவினாசியிலிருந்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் பூண்டியிலிருந்து ரிங்ரோடு, பூலுவபட்டி, வழியாக புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
2. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் அனைத்து வெளியூர் (திருச்சி, கோவை, மதுரை) பேருந்துகள் அனைத்தும் பூலுவபட்டி சென்று ரிங்ரோடு வழியாக அந்தந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
3. காங்கேயம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் நல்லூர், வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
4. தாராபுரம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் கோவில்வழி, வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
5. பல்லடத்திலிருத்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் வீரபாண்டி பிரிவிருந்து பழவஞ்சிபாளையம் வழியாக கோவில்வழி, பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.
6. மங்கலம் வழியாக திருப்பூர் வரும் பேருந்துகள் அனைத்தும் ஆண்டிபாளையம் பிரிவு, வித்யாலயம் வழியாக பல்லடம் சாலையை வந்தடைய வேண்டும்.
7. அனைத்து வெளியூர் பேருந்துகளும் 08.09.2016 அன்று பழைய பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை.
8. அனைத்து உள்ளூர் பேருந்துகளும் ஊர்வலபாதைக்கு ஏற்றாற்போல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வழித்தடம் மாறுதல் செய்யப்படும்.
என திருப்பூர் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment