Thursday, September 01, 2016
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல்
பழனியை அடுத்துள்ள குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம், மயிலாபுரம், மொரத்தூர், கொழுமம், புதுநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 800 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் சில தனிப்பட்ட நபர்களுக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளதாகக் கூறி புதன்கிழமை உழவர் உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாநில தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் திருப்பூர் மாவட்ட எல்லையான கொழுமம் சோதனைச் சாவடி அருகே மறியலில் ஈடுபட வந்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். வருவாய்த் துறையினரும் அங்கு வந்திருந்தனர். ஆனால், விவசாயிகள் திடீரென அப்பகுதியில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் நுழைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் மாவட்ட எல்லையிலேயே போலீஸார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சாலை மறியல் குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவே அங்கு பழனி வட்டாட்சியர் ராஜேந்திரன், பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...
0 comments:
Post a Comment