Thursday, September 01, 2016
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல்
பழனியை அடுத்துள்ள குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, திருப்பூர் மாவட்ட விவசாயிகள், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம், மயிலாபுரம், மொரத்தூர், கொழுமம், புதுநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 800 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் சில தனிப்பட்ட நபர்களுக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளதாகக் கூறி புதன்கிழமை உழவர் உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாநில தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் திருப்பூர் மாவட்ட எல்லையான கொழுமம் சோதனைச் சாவடி அருகே மறியலில் ஈடுபட வந்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். வருவாய்த் துறையினரும் அங்கு வந்திருந்தனர். ஆனால், விவசாயிகள் திடீரென அப்பகுதியில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் நுழைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் மாவட்ட எல்லையிலேயே போலீஸார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சாலை மறியல் குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவே அங்கு பழனி வட்டாட்சியர் ராஜேந்திரன், பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment