Thursday, September 01, 2016
சேவூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறி செய்து, காவலரைத் தாக்கிக் கடித்துவிட்டு, தப்பியோட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்தவர் முத்துசாமி (43). இவர் சணல் பை வியாபாரி. இவர், சேவூர் அருகே போத்தம்பாளையத்தில் புதன்கிழமை சணல் பை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகச் சென்ற மர்ம நபர், முத்துசாமியிடம் முகவரி விசாரிப்பதுபோல் நடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, முத்துசாமி சப்தம் போட்டுள்ளார். அவரது சப்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்தியமூர்த்தி, அந்த வழிப்பறித் திருடனை பிடிக்க முயன்றுள்ளார். அந்த திருடன், சத்தியமூர்த்தியைத் தாக்கிக் கடித்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார், அந்தத் திருடனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர், சேவூர் அருகே புதுச்சந்தைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (எ) புங்கான் என்பதும், இவர் ஏற்கெனவே 4 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் புங்கானை கைது செய்துள்ளனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment