Thursday, September 01, 2016
சேவூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறி செய்து, காவலரைத் தாக்கிக் கடித்துவிட்டு, தப்பியோட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்தவர் முத்துசாமி (43). இவர் சணல் பை வியாபாரி. இவர், சேவூர் அருகே போத்தம்பாளையத்தில் புதன்கிழமை சணல் பை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகச் சென்ற மர்ம நபர், முத்துசாமியிடம் முகவரி விசாரிப்பதுபோல் நடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, முத்துசாமி சப்தம் போட்டுள்ளார். அவரது சப்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்தியமூர்த்தி, அந்த வழிப்பறித் திருடனை பிடிக்க முயன்றுள்ளார். அந்த திருடன், சத்தியமூர்த்தியைத் தாக்கிக் கடித்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார், அந்தத் திருடனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர், சேவூர் அருகே புதுச்சந்தைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (எ) புங்கான் என்பதும், இவர் ஏற்கெனவே 4 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் புங்கானை கைது செய்துள்ளனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
 
0 comments:
Post a Comment