Thursday, September 01, 2016
சேவூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறி செய்து, காவலரைத் தாக்கிக் கடித்துவிட்டு, தப்பியோட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்தவர் முத்துசாமி (43). இவர் சணல் பை வியாபாரி. இவர், சேவூர் அருகே போத்தம்பாளையத்தில் புதன்கிழமை சணல் பை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகச் சென்ற மர்ம நபர், முத்துசாமியிடம் முகவரி விசாரிப்பதுபோல் நடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, முத்துசாமி சப்தம் போட்டுள்ளார். அவரது சப்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்தியமூர்த்தி, அந்த வழிப்பறித் திருடனை பிடிக்க முயன்றுள்ளார். அந்த திருடன், சத்தியமூர்த்தியைத் தாக்கிக் கடித்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார், அந்தத் திருடனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர், சேவூர் அருகே புதுச்சந்தைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (எ) புங்கான் என்பதும், இவர் ஏற்கெனவே 4 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் புங்கானை கைது செய்துள்ளனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment