Wednesday, September 21, 2016

திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் சார்பில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.இலவச பயிற்சி வகுப்பு
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் பயிற்றுவித்தல் பணிகள் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கி பேசியதாவது:–மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., வி.ஏ.ஓ., பி.எஸ்.ஆர்.டி. ஆகிய அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற அக்டோபர் மாதம் 31–ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.இதில் வாரந்தோறும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 2–வது வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் தேர்வு பெறுபவர்களுக்கு பணிநியமன ஆணையை நான் வழங்குறேன்.உதவித்தொகை
ஒவ்வொரு மாதமும் 3–வது வெள்ளிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அல்லது தொழில் நெறிக்கருத்துரை வழங்கப்பட்டு வருகிறது.வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டம் மூலம் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து இதுவரை அரசு பணி கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து ஒருவருடம் முடிந்தவுடன் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு கல்லூரியில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும். இந்த பணிகளை அதிகாரிகள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் எஸ்.ஜெயந்தி கூறினார்.கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி காளிமுத்து, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment