Wednesday, September 07, 2016
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரூ.98 லட்சத்தில் தரைதளம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பஸ்நிலையம் கணியூர், கடத்தூர், சோழமாதேவி, நீலம்பூர், கண்ணாடிபுத்தூர் உள்ளிட்ட கிராமங்களை நகரங்களோடு இணைக்கும் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது. மடத்துக்குளம் பஸ்நிலையம், உடுமலை, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மடத்துக்குளம் பஸ்நிலையத்திலிருந்து பஸ் ஏறிச்செல்கின்றனர்.மேலும் பஸ்நிலையத்தை ஒட்டியே ரெயில் நிலையம் அமைந்துள்ளதால் அதிக அளவிலான மக்களால் தினசரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பஸ்நிலையத்தில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணிகள் ரூ.98 லட்சம் செலவில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கென முதலில் இருந்த காங்கிரீட் தளம் பெயர்த்தெடுக்கப்பட்டு புதிய “பேவர் பிளாக் கற்கள்“ பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.பணிகள் தொய்வு
பணி தொடங்கி சுமார் 2 மாதம் ஆன நிலையிலும் பாதியளவு கூட பணி நிறைவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சில டவுன் பஸ்கள் தவிர பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்லாததால் பயணிகளை ரோட்டிலேயே ஏற்றி, இறக்கி விடும் அவல நிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகளை மெயின் ரோட்டிலேயே இறங்கி சுமைகளை தூக்கிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதான பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும் பஸ் நிலையத்திற்குள் அமைந்துள்ள பேரூராட்சி வணிக வளாகத்தில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் வியாபாரமின்றி தவிக்கும் நிலை உள்ளது. கட்டுமானப்பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாலும் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதாலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை,பொதுகழிவறை ஆகியவற்றை பயன்படுத்துவதில் பெரும்சிரமம் உள்ளது. தாலுகா தலைநகரான மடத்துக்குளம் பகுதியில் மக்கள் சந்திக்கும் இன்னல்களைக்களைய பஸ்நிலைய தரைத்தளம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment