Thursday, September 08, 2016
திருப்பூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் திருப்பூர் ஸ்ரீநகரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் பிரிவு ஸ்ரீநக ர் கிளை சார்பில் விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் மாநில இணை அமைப்பாளர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாநகர தலைவர் திருச்செல்வம், பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பூர் ஸ்ரீநகர் ஜமாத் கமிட்டியின் தலைவர் நாதர்ஷா அலி மற்றும் நிர்வாகிகள் அரோமா நவ்ஷாத், ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பா.ஜனதா தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் முருகன், தி.மு.க. 29–வது வார்டு பொறுப்பாளர் மதிவாணன், ஐ.ஜே.கே. மாவட்ட செயலாளர் மனோகரன், பஜ்ரங்தள் அமைப்பு ஸ்ரீநகர் கிளை நிர்வாகிகள் காசி, கணேஷ், குமார், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூரில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கொடி அசைத்து வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment