Thursday, September 08, 2016
திருப்பூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் திருப்பூர் ஸ்ரீநகரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் பிரிவு ஸ்ரீநக ர் கிளை சார்பில் விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் மாநில இணை அமைப்பாளர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாநகர தலைவர் திருச்செல்வம், பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பூர் ஸ்ரீநகர் ஜமாத் கமிட்டியின் தலைவர் நாதர்ஷா அலி மற்றும் நிர்வாகிகள் அரோமா நவ்ஷாத், ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பா.ஜனதா தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் முருகன், தி.மு.க. 29–வது வார்டு பொறுப்பாளர் மதிவாணன், ஐ.ஜே.கே. மாவட்ட செயலாளர் மனோகரன், பஜ்ரங்தள் அமைப்பு ஸ்ரீநகர் கிளை நிர்வாகிகள் காசி, கணேஷ், குமார், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூரில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கொடி அசைத்து வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment