Thursday, September 08, 2016
மருமகளிடம் இருந்து மகனை பிரித்து வைத்த குற்றத்துக்காக பெண்ணுக்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.பனியன் நிறுவன தொழிலாளி
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் மூர்த்தி நகரை சேர்ந்தவர் நஞ்சம்மாள்(வயது 55). இவருடைய மகன் விஜயகுமார்(31). பனியன் நிறுவன தொழிலாளி. விஜயகுமாரும், திருநீலகண்டபுரம் எஸ்.வி.காலனியை சேர்ந்த ரெமிதாவும்(29) காதலித்து கடந்த 21–9–2011 அன்று திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் 2 மாதம் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.ஆனால் நஞ்சம்மாள், தனது மருமகளான ரெமிதாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 23–12–2012 அன்று வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற விஜயகுமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மேலும் விஜயகுமார் தனது செல்போனில் இருந்து ரெமிதாவுக்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) அனுப்பினார். அதில் ரெமிதாவை விட்டு பிரிந்து செல்வதாகவும், தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.5 நாள் சிறை தண்டனை
இதைத்தொடர்ந்து ரெமிதா திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது மாமியாரின் தூண்டுதலின் பேரில் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், இதற்கு காரணமான தனது மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மகளிர் போலீசார், நஞ்சம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1–ல் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்லத்துரை, பெண்ணுக்கு கொடுமை செய்த குற்றத்துக்காக நஞ்சம்மாளுக்கு 5 நாள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment