Thursday, September 08, 2016
மருமகளிடம் இருந்து மகனை பிரித்து வைத்த குற்றத்துக்காக பெண்ணுக்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.பனியன் நிறுவன தொழிலாளி
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் மூர்த்தி நகரை சேர்ந்தவர் நஞ்சம்மாள்(வயது 55). இவருடைய மகன் விஜயகுமார்(31). பனியன் நிறுவன தொழிலாளி. விஜயகுமாரும், திருநீலகண்டபுரம் எஸ்.வி.காலனியை சேர்ந்த ரெமிதாவும்(29) காதலித்து கடந்த 21–9–2011 அன்று திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் 2 மாதம் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.ஆனால் நஞ்சம்மாள், தனது மருமகளான ரெமிதாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 23–12–2012 அன்று வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற விஜயகுமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மேலும் விஜயகுமார் தனது செல்போனில் இருந்து ரெமிதாவுக்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) அனுப்பினார். அதில் ரெமிதாவை விட்டு பிரிந்து செல்வதாகவும், தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.5 நாள் சிறை தண்டனை
இதைத்தொடர்ந்து ரெமிதா திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது மாமியாரின் தூண்டுதலின் பேரில் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், இதற்கு காரணமான தனது மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மகளிர் போலீசார், நஞ்சம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1–ல் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்லத்துரை, பெண்ணுக்கு கொடுமை செய்த குற்றத்துக்காக நஞ்சம்மாளுக்கு 5 நாள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment