Friday, September 30, 2016
உடுமலை,உடுமலை அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–பூட்டு உடைப்பு
உடுமலையை அடுத்துள்ள கண்டியகவுண்டன்புதூர் பொன்மயில் நகரைச்சேர்ந்தவர் அசோக் (வயது40) விவசாயி. இவர் கடந்த 26–ந்தேதி குடும்பத்துடன் ஆந்திரமாநிலம் மந்த்ராலயாவில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் குடியிருக்கும் சிதம்பரசாமி என்பவர் அசோக் வீட்டின் வழியாக நேற்றுமுன்தினம் வந்தபோது அசோக்கின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சிதம்பரசாமி உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட தகவல் அசோக்கிற்கு தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு நேற்று உடுமலைக்கு வந்து சேர்ந்தார்.13 நகைகள் திருட்டுஅவர் வந்து பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அசோக் உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை உடுமலை போலீசார் தேடி வருகின்றனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆல...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 10.2.16 திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பேட்டியளித்த கமலக்கண்ணன் எதிர்கட்சியின் சதி அஇத...
-
திருப்பூரில் நடந்த தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்குக்கு தலைமை தாங்கிய இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜாசண்முகம் பேசி...
-
உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தி...
-
திருச்சி தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்கவும் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகி...
-
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங...
0 comments:
Post a Comment