Friday, September 30, 2016

On Friday, September 30, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலை அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–பூட்டு உடைப்பு

உடுமலையை அடுத்துள்ள கண்டியகவுண்டன்புதூர் பொன்மயில் நகரைச்சேர்ந்தவர் அசோக் (வயது40) விவசாயி. இவர் கடந்த 26–ந்தேதி குடும்பத்துடன் ஆந்திரமாநிலம் மந்த்ராலயாவில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் குடியிருக்கும் சிதம்பரசாமி என்பவர் அசோக் வீட்டின் வழியாக நேற்றுமுன்தினம் வந்தபோது அசோக்கின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சிதம்பரசாமி உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.இதையொட்டி உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட தகவல் அசோக்கிற்கு தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு நேற்று உடுமலைக்கு வந்து சேர்ந்தார்.13 நகைகள் திருட்டுஅவர் வந்து பார்த்தபோது வீட்டின் அறையில் பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அசோக் உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை உடுமலை போலீசார் தேடி வருகின்றனர்

0 comments: