Saturday, September 10, 2016
திருப்பூர்திருப்பூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையில், கலெக்டர் தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பாதிப்புக்குள்ளாக கூடிய, ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் நிதி ஆதரவுத்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து வட்டாரங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் இல்ல ஆய்வு மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தற்போதைய கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு நிதி ஆதரவு மற்றும் தற்காலிக பராமரிப்பு வழங்கும் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.2014–15–ம் ஆண்டு 40 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் 2015–16–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 36 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 7 மாதங்களுக்கு ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஆதரவுத்தொகைக்கான காசோலையை மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வசந்தகுமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா, தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஜோதிலட்சுமி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கலந்துகொண்டனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment