Saturday, September 10, 2016

திருப்பூர்திருப்பூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையில், கலெக்டர் தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பாதிப்புக்குள்ளாக கூடிய, ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் நிதி ஆதரவுத்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து வட்டாரங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் இல்ல ஆய்வு மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தற்போதைய கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு நிதி ஆதரவு மற்றும் தற்காலிக பராமரிப்பு வழங்கும் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.2014–15–ம் ஆண்டு 40 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் 2015–16–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 36 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 7 மாதங்களுக்கு ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஆதரவுத்தொகைக்கான காசோலையை மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வசந்தகுமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா, தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஜோதிலட்சுமி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கலந்துகொண்டனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment