Saturday, September 10, 2016

திருப்பூர்திருப்பூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையில், கலெக்டர் தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பாதிப்புக்குள்ளாக கூடிய, ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் நிதி ஆதரவுத்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து வட்டாரங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் இல்ல ஆய்வு மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தற்போதைய கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு நிதி ஆதரவு மற்றும் தற்காலிக பராமரிப்பு வழங்கும் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.2014–15–ம் ஆண்டு 40 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் 2015–16–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 36 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 7 மாதங்களுக்கு ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஆதரவுத்தொகைக்கான காசோலையை மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வசந்தகுமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா, தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஜோதிலட்சுமி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கலந்துகொண்டனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
0 comments:
Post a Comment