Saturday, September 10, 2016
திருப்பூர்திருப்பூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையில், கலெக்டர் தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பாதிப்புக்குள்ளாக கூடிய, ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் நிதி ஆதரவுத்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து வட்டாரங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் இல்ல ஆய்வு மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தற்போதைய கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு நிதி ஆதரவு மற்றும் தற்காலிக பராமரிப்பு வழங்கும் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.2014–15–ம் ஆண்டு 40 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் 2015–16–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 36 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 7 மாதங்களுக்கு ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஆதரவுத்தொகைக்கான காசோலையை மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வசந்தகுமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா, தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஜோதிலட்சுமி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கலந்துகொண்டனர்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment